Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

கண்ணதாசனின் ரகசியங்‌கள்


வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன.
மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.
அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.



எது என் குதிரை..?

குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.


கோவை கொடீசியா-தோட்‌டக்கலை துறை கண்காட்சி

பல நாட்களுக்குப் பிறகு பதிவிடுவதில் மகிழ்ச்சி.இந்த முறை கோவை கொடீசியாவில் நடைபெற்ற தோட்‌டக்கலை துறை கண்காட்சி பற்றி பதிவிட இருக்கிறோம்.முகநூல் நண்பர் ஒருவர் கண்காட்சி பற்றி கேட்டிருந்தார்.தவிர்க்க இயலாத காரணத்தால் நாம் செல்ல இயலவில்லை.நம் நண்பர் குழு ஒன்று பார்வையிட்டு,நமக்காக புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.இதோ உங்கள் பார்வைகளுக்கு.
பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட உருவங்கள் மனத்தை கவருவதாய் இருந்தன.




மரங்கள்-நம் மருத்துவர்கள்

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மரங்களின் தன்மை,மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.முதலாவதாய் வருவது அரச மரம்தான்.
”அரசு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது நம் முன்னோர் மொழி.அரசமரத்தின் உதிர்ந்த இலைகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் விளைச்சல் எடுக்கலாம்.ஒரு வருடத்திற்கு 1 டன் முதல் 4 டன் இலைகளை உதிர்க்கும் இந்த அரச மரம்,மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.மேலும் அதிகளவு ஆக்ஸிஜன் வாயுவை தரும் மரமும் இதுவே
இதனால்தான் நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் நட்டு,108 தடவை சுற்றி வரச் செய்தார்கள்.அப்படி சுற்றி வரும்போது கார்பன் -டை -ஆக்ஸைடை அதிகளவு  உட்கிரகித்து கொண்டு,உடம்புக்குத் தேவையான பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த இந்த அரச எனும் போதி மரம்,விசுவாமித்திர முனிவருக்கும் காயத்ரீ ஞானம் பிறந்தது.கி,மு,288 காலங்களில் அசோகர் ஸ்ரீலங்கா மன்னருக்கு புத்த மதத்தின் பரிசாய் அனுப்பியிருக்கிறார்.இதனால் அரசமரத்தடியில் புத்ததுறவிகள் கூடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காந்திஜியும்,நேருவும் அரச மரங்களை நட்டனர்,.இன்னும் கிராமங்களில் மக்கள் கூடும் சந்தைகளும்,விசேடங்களும் அரச மரத்தடியில்தான்.கிராமங்களில் அரச மரம் ஆணாகவும்,வேம்பு பெண்ணாகவும் சித்தரித்து திருமணம் செய்விப்பார்கள்.குழந்தை பேறு உண்டாக்கும் மருந்துகள்,சுற்றி வரும்போது ஏற்படும் வேதியல் மாற்றங்களால்,பிணி நீங்குதல்,மூல நோயை குணப்படுத்துதல்,என்று இதன் மருத்துவகுணங்கள் ஏராளம்.




என்ன செய்யப்போகிறது இளைஞர் சமுதாயம் - கோ நம்மாழ்வார்


நன்றி : தினமலர்
(2011).

கிராமங்களைப் பற்றி பேசச் சொன்னால் பல் முளைக்கும் குழந்தை போல லயித்துச் சிரிக்கிறார் வேளான் ஞானி கோ.நம்மாழ்வார்.

“”எங்கள் கிராமத்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி வழியும். சிறு வயதில் குட்டிக்கரணம் அடித்து குதூகலிப்போம் . வண்டிகளும், மாடுகளும் அதில்தான் இறங்கி ஏறும். பின் அங்கே பாலம் வந்தது.
கோடை காலத்தில் தண்ணீர் இல்லாத வெது மணலில் சடுகுடு ஆடினோம். இன்று வாய்க்காலில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை.
இருமருங்கிலும் நெல்லி, மா, நாவல் மரங்கள் இருந்தன. இன்று அவையெல்லாம் அருகிவிட்டன.
மாலை நேரங்களில் நிலா வெளிச்சத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடும். தாய் தகப்பனுடன் வீட்டின் திண்ணையில் அமர்ந்து குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு ரசிப்பதோடு தங்களின் கஷ்ட நஷ்டங்களை அண்டை அயலாரோடு பகிர்ந்து, கூடி வாழ்ந்தார்கள்.

இன்பம் செழித்த மருத நிலமாகத் திகழ்ந்த மக்கள் வாழ்வு இன்று பாலையாகவே மாறிவிட்டது. இன்று ஏன் நினைவுகளின் நிழலைக்கூட அங்கு காணமுடிவதில்லை.



Animated Social Gadget - Blogger And Wordpress Tips